பிரான்ஸில் தினசரி கொரோனா தொற்று நோயாளர் தொகை மிக மோசமாக அதிகரித்துள்ள நிலையில் நாடு தழுவிய சமூக முடக்கல் அமுல் செய்யப்படாது என சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் கூறினார்.
அதிகரித்த சோதனை உட்பட வைரஸை எதிர்த்துப் போராட பிரான்ஸூக்கு வேறு வழிகள் இருப்பதாக பி.எஃப்.எம். தொலைக்காட்சிக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவா் தெரிவித்தார்.
மீண்டும் ஒரு நாடு தழுவிய சமூக முடக்கலை என்னால் கற்பனை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரான்ஸில் நேற்று முன்தினம் 8,975 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இது பிரான்ஸில் தொற்று நோயின் ஆரம்பித்தில் இருந்து பதிவான மிக உயர்ந்தபட்ச ஒருநாள் எண்ணிக்கையாகும்.
மார்ச் 31 அன்று 7,578 தொற்று நோயாளர் தொகையே இதற்கு முன்னர் ஒருநாள் அதிகபட்ச தொகையாகப் பதிவாகியிருந்த நிலையில் கிட்டத்தட்ட அதற்கு ஆயிரத்துக்கு அதிகமான தொற்று நோயாளர்கள் நேற்று முன்தினம் பதிவாகியமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 55 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
மாதத்திற்கு சராசரியாக 1,500 முதல் 2,000 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர் என்பதே இதன் பொருள் ஆகும் என சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் கூறினார்.
மேலும், அவர் அடுத்த இருவாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகளவாள நோயாளர்கள் அனுமதிக்கப்படலாம். எனவே, மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவா் எச்சரித்தார்.
மக்கள் கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தார்.
பொதுமுடக்கல் காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக 8 ஆயிரயித்துக்கு மேற்பட்டவா்கள் பாதிக்கப்படுவது பெரும் அச்சுறுத்தலாகும் எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு